ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விண்ணேற்பு ஆண்டவர் ஆலய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரினில் விண்ணேற்பு ஆண்டவர், அன்னை மரியாள் சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.