ஞாயிறு விடுமுறையை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி முருகனை மனமுருக வேண்டினர்.