புதுக்கோட்டை அருகே பாலக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மகா கும்பாபிஷேக விழா அதி விமர்சையாக நடைபெற்றது. வல்லத்திராக்கோட்டை அருகே உள்ள பாலக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில், இரண்டு நாட்களாக யாகசாலை பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடத்தினை தலையில் சுமந்தவாறு மேள தாளங்கள் முழங்க கோயில் வளாகத்தை சுற்றி, பின்னர் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது, கருட பகவான் வானில் வட்டமிட பின்னர் சிவாச்சாரியார்கள் கும்பத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு, சாமி தரிசனம் செய்தனர்.