Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 11:04 AM
By: Manigandan Raja

முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் :
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி,
பொது மற்றும் ரூ.100 கட்டன தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம், கடற்கரை, உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் பக்தர்கள் காணப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved