ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட தடை கோரிய ஆப்பநாடு மறவர் சங்கத்தை தடை செய்யக்கோரி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவேந்திரகுல வேளாளர் படுகொலை வழக்குகளை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 500கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..