தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசாணை பிறப்பித்து ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. தற்போது தங்கம் விலை உயர்வுக்கு காப்பர் உற்பத்தி பாதிப்பே காரணம் என்று கூறினர்.இதில் பங்கேற்றவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.