சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் திரையரங்கத்தின் முன்பகுதி பலத்த காற்று காரணமாக சேதமடைந்தது. மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள சந்தோஷ் சினிமாஸ் திரையரங்கின் முன்பகுதி சேதமடைந்தது. இதனை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு, சேதமடைந்த பகுதிகளை ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்