கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள சேலம் ஆர்ஆர் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததால் வாடிக்கையாளர் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வண்டிகேட் பகுதியில் சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு வந்த விருதாச்சலம் தம்பதியினர் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அதில் கரப்பான் பூச்சி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாடிக்கையாளரின் மனைவி கர்ப்பிணி பெண் என்பதால், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.