கோவில் குடமுழுக்கு விழாக்கள் மூலம் திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது என்ற விமர்சனங்கள் நொறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். நாகை மாவட்டம் திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டவர், திமுக அரசு பொறுப்பேற்ற பின், நடத்தப்படும் 3 ஆயிரமாவது குடமுழுக்கு விழா இது என்று கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோவில்களுக்கு குடமுழுக்க நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.