சென்னை தரமணியில் 60 ஆண்டு காலமாக செயல்படும் சிபிடி பாலிடெக்னிக் கல்லூரியில், நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் கல்லூரி போதிய பராமரிப்பின்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்கல்லூரியில் நாளை மறுநாள் நீட் தேர்வு நடைபெறவுள்ளதை ஒட்டி ஆய்வு மேற்கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், கல்லூரி சுவர்கள் விரிசல் அடைந்தும், மேற்கூரை சேதமடைந்தும் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரி வளாகத்தில் கழிவறையும் மோசமானதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்று ஏற்பாடு செய்வதை குறித்து கல்வித்துறையும், தேசிய தேர்வு முகமையும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.