சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் பிரதான சாலையில் இரண்டு மாடுகள் ஒன்றுக்கொன்று முட்டி சண்டையிட்டுக் கொண்டே, குழந்தையுடன் தம்பதி சென்ற இருசக்கர வாகனத்தை முட்டி கீழே தள்ளியது. காரைக்குடியில் பிரதான 100 அடி சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு சாலையின் ஓரத்தில் நின்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை முட்டித் தள்ளியது. வாகனங்களுக்கு இடையூறாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள், திடீரென சாலையில் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது.