சென்னை வியாசர்பாடி பகுதியில் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்த நிலையில், பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன. சத்தியமூர்த்தி நகர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்த நிலையில், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.