செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தம் அருகே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாதங்குப்பம் கிராமத்தில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது. பணி தொடங்கிய சில நாட்களில், கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியதாக குற்றம்சாட்டி பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.