கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி நேரம் 9 மணி நேரமாக அதிகரித்ததை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துடன் ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், 8 மணி நேரம் வேலை செய்து வந்த ஒப்பந்த ஊழியர்களை 9 மணி நேரம் வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.