Also Watch
Read this
By: Manigandan Raja

தொடரும் மின்வெட்டு :
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாபுரியில் சுமார் 8,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணி திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பதில் இருந்து சிறுவாபுரி முருகனைக் காண பக்தர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து தொடங்கி வரும் சூழலில்.
நேற்று இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்தனர். மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஹோட்டல் நடைபெற்றது. மேலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மாலை கட்டும் பணியில் பூ வியாபாரிகள் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமும் பிறகும் மின்சாரம் வராததால் இரவு கோயில் நடை முடிந்து வீட்டிற்கு செல்லும் பக்தர்கள் அவதி அடைந்தனர். நீண்ட நேரம் இரவு கடந்து பல மணி நேரமாகியும் மின்சாரம் வரதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சிறுவாபுரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பதிவாசிகள் குற்றம் சாட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved