திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிரம் அடுத்த பாலவேடு சுங்கச்சாவடி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்டெய்னர் லாரி அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடி மீது மோதியதாக கூறப்படுகிறது. உடனே லாரி ஓட்டுநரை மடக்கி பிடித்த ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்தில்சுங்கச்சாவடி பூத் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.