தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். காமக்காப்பட்டியில் ராஜேந்திரன், என்பவரது ஹோட்டலும் வரும் நபர்கள் எதிரில் உள்ள செல்லமாயன் வீட்டின் வாசலில் வாகனங்கள் நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராஜேந்திரன் மனைவியை, செல்லமாயன் மகன் சீலன் கல்லைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது.