சென்னை பெரம்பூரில் நேற்று பெய்த மழையால் வீட்டின் முன்பக்க காங்கிரீட் ஸ்லாப் இடிந்து விபத்துக்குள்ளானது. தனிநபருக்கு சொந்தமான இந்த பழைய வீட்டில் இருவர் குடியிருந்து வரும் நிலையில், இரண்டரை அகலம் 10 அடி நீளம் கொண்ட வீட்டின் முன்பக்க ஸ்லாப் மழைநீரில் ஊறி இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.