தென்காசியில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள ஆட்சியர் அலுவலகம் பாழடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாக புகார் எழுந்துள்ளது. 2020-ம் ஆண்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை உடனே திறக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.