கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். குமரன் நகரில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வரும் நிலையில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், இதனால் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்து வருவதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் புகாரளித்தனர்.இதையும் படியுங்கள் : பில்லூர் அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்வு... நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து அதிகரிப்பு