போலி சைக்கிள் நிறுவன மோசடியில் நாடு முழுவதும் இருந்தும் புகார்கள் குவிவதால் மத்திய சைபர் கிரைம் போலீசாரின் உதவியை புதுச்சேரி போலீஸார் நாடியுள்ளனர். புதுச்சேரி சாரம் பகுதியில் இயங்கிவரும் "Go free cycle" என்ற நிறுவனத்தில் நான்கரை லட்சம் முதலீடு செய்தால் பல மடங்கு வட்டி தரப்படும் எனக் கூறி இணையத்தில் விளம்பரம் செய்து 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.