திருவாரூரில் அதிக விலைக்கு உரங்களை விற்பதாக எழுந்த புகாரையடுத்து 13 கடைகளில் உரம் விற்பனை செய்ய வேளாண்மை துறை அதிகாரிகள் தடை விதித்தனர். யூரியா உரத்தின் விலை 270 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள கடைகளில் 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போது அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.