தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பகுதியில் குடிநீர் சில நாட்களாக விநியோகம் செய்யப்படவில்லை என கூறி, கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சமாதானம் செய்ய வந்த காவல் துறையினரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.