<style>body{font-family:Arial,sans-serif;font-size:10pt;}</style><style>.cf0{font-weight:bold;font-family:Consolas;font-size:11pt;}.cf1{font-weight:bold;font-family:Consolas;font-size:11pt;}.cf2{font-weight:bold;font-family:Nirmala UI,sans-serif;font-size:11pt;}</style><style>.pf0{}</style><!--StartFragment --><p class="pf0"><span class="cf2">சென்னை </span><span class="cf2">மாநகராட்சியின் </span><span class="cf2">இரண்டு </span><span class="cf2">மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தடையில்லை </span><span class="cf2">என்று</span><span class="cf1">, </span><span class="cf2">சென்னை </span><span class="cf2">உயர்நீதிமன்றம் </span><span class="cf2">உத்தரவிட்டுள்ளது</span><span class="cf1">.</span></p><p class="pf0"><span class="cf2">சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு, தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</span><br></p><p class="pf0"><span class="cf2">இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகில் தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்</span><span class="cf1">.</span><span class="cf2"> போராட்டம் காரணமாக பொது</span><span class="cf2">மக்கள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றத்தில் </span><span class="cf2">வழக்கு தொடரப்பட்டது. </span></p><p class="pf0"><span class="cf2">இந்த வழக்கு விசாரணைக்கு </span><span class="cf2">வந்த</span><span class="cf2">போது</span><span class="cf1">,</span><span class="cf2"> தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால்</span><span class="cf1">,</span><span class="cf2"> பொது மக்கள் அந்த பகுதியை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறி</span><span class="cf1">,</span><span class="cf2"> போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.</span></p><p class="pf0"><span class="cf2">இந்த </span><span class="cf2">நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி</span><span class="cf1">,</span><span class="cf2"> உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.</span><br></p><p class="pf0"><span class="cf2">இதுதொடர்பாக</span><span class="cf1">,</span><span class="cf2">உயர்நீதிமன்ற </span><span class="cf2">நீதிபதி கே.சுரேந்தர் அளித்த </span><span class="cf2">தீர்ப்பில் கூறியதாவது; </span></p><p class="pf0"><span class="cf2">தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்பதால்</span><span class="cf1">,</span><span class="cf2"> தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தடை இல்லை. </span><span class="cf2">தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் .</span></p><p class="pf0"><span class="cf2">தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. சென்னை மாநகராட்சியின் </span><span class="cf1">2</span><span class="cf2"> மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடை விதிக்க முடியாது</span><span class="cf1">. </span></p><p class="pf0"><span class="cf2">இவ்வாறு </span><span class="cf2">தீர்ப்பளித்த </span><span class="cf2">நீதிபதி</span><span class="cf1">, </span><span class="cf2">இந்த </span><span class="cf2">வழக்கை </span><span class="cf2">முடித்து </span><span class="cf2">வைத்தும் </span><span class="cf2">உத்தரவிட்டார்</span><span class="cf1">.</span></p><!--EndFragment -->