12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் 2 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தினசரி ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு 760 ரூபாயும், ஓட்டுநர்களுக்கு 798 ரூபாயும் வழங்க வேண்டும், வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிடித்தம் செய்யப்பட்ட PF ESI தொகையை ஒப்பந்ததாரர் ஒராண்டுக்கு மேல் கட்டாமல் இருப்பதை கண்டித்தும் 400-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் தஞ்சை மாநகராட்சியில் இரண்டாவது நாளாக குப்பைகள் தேங்கியுள்ளன.