சேலம் அரிசிபாளையம் பகுதியில் பிஸ்கட், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் மொத்த விற்பனை கடையின் குடோனில் இருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த சிகரெட் பெட்டிகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிவபாலன் என்பவரின் கடைப் பணியாளர்கள் நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. செவ்வாய்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.