ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பால்குட ஊர்வலத்தில் சிறுவர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். பம்மனேந்தல் குருநாதசாமி கோயிலின் 49 ஆவது குருபூஜை மற்றும் பெத்தநாச்சி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு மேளதாளங்களுடன் ஆயிரத்து 8 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் சேறு பூசியும், பக்தர்கள் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.