டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக, கல்லணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீரை திறந்து விடுகிறார். இன்று முதல் 2 நாட்கள் தஞ்சையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். இதன்மூலம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள விளை நிலங்கள் பயனடையும்.