சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று காலை 7 மணி முதல் இரவு 8 வரை சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்கள், பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் பயணிகள் நலன் கருதி, தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், தியாகராயர் நகர், பாரிமுனைக்கு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.