திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள துணிக்கடையில் காவலர் எனக் கூறி கொண்டு ஒருவர் செண்ட் பாட்டிலை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடைக்குள் நுழைந்த உடன் தன்னை காவலர் என அறிமுகம் செய்து கொண்ட நபர் ஊழியர்கள் திரும்பிய போது செண்ட் பாட்டிலை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டார். பின்னர் ஊழியர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது திருடியது தெரியவந்த நிலையில், பின்னர் அதற்கு சேர்த்து பில் போடுங்கள் என சமாளித்துள்ளார்.