நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே சரக்கு ஆட்டோ மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விபத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த அன்பரசன் என்பவருடைய மகன் மாரியம்மன் வெப்படை பகுதியில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது வளைவில் திடீரென சரக்கு ஆட்டோ ஒன்று திரும்பியதால் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.