ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. புஞ்சைபுளியம்பட்டி பகுதி முழுவதும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டும் பொதுமக்கள், காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.