மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த திமுக வலியுறுத்தும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுவரையறையின் மூலம் இந்தி மொழி பேசும் 10 மாநிலங்களில் மட்டுமே பாஜக கவனம் செலுத்தும் என்றும், மற்ற மாநிலங்களில் பூஜ்ஜியம் தொகுதிகளை வாங்கினால் கூட அவர்கள் ஆட்சியமைக்க முடியும் எனவும் குற்றம் சாட்டினார்.