செக் மோசடி தொடர்பான ஆவணங்களை திருடி எரித்து அழித்த மோசடி ஆசாமிக்கு இரணியல் நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும், ஆவணங்களை திருடிக் கொடுத்த நீதிமன்ற ஊழியருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஷ்வரத்தை சேர்ந்த நாகராஜன், தன் மீதான செக் மோசடி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, இரணியல் நீதிமன்றத்தில் பணிபுரிந்த ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை அணுகினார். நீதிமன்றத்தில் இருந்த செக் உள்ளிட்ட ஆவணங்களை லட்சுமணன் திருடி நாகராஜனிடம் கொடுத்தார். அவர் அந்த ஆவணங்களை தீவைத்து எரித்து அழித்து விட்டார்.