மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், சின்ன உடைப்பு கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.