கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரண்டு இரு சக்கர வாகனங்களை தோளில் சுமந்து இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் கண்ணன் கன்னியாகுமரி மாவட்ட உடல் வலு தூக்கும் சங்கம் சார்பில் அவிட்டம் திருநாள் மைதானத்தில் சுமார் 270 கிலோ எடை கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களை தோளில் சுமந்தபடி 42 மீட்டர் தூரத்திற்கு நடந்து சாதனை படைத்தார். இது உலக சாதனை புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.முன்னதாக 9.5 டன் எடையுள்ள லாரியை கட்டி இழுத்தும் கண்ணன் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.