ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த காரில், சரியான நேரத்தில் ஏர்பேக் திறக்கப்பட்டதால் கல்லூரி பேராசிரியை உயிர் தப்பினார். டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த வனஜா, பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென வலப்புறம் திரும்பிய பைக் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பிய போது விபத்து ஏற்பட்டது.