திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் காலியாக உள்ள 43 இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர்களுடன் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சிவசௌந்தரவல்லி ஆலோசனை நடத்தினார்.