திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வணிகர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறில் தற்காலிக கடைகள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வணிகர் சங்க நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். பின்னர், கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.