சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபரிடம் எஸ்.ஐ ஒருவர் லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. இலுப்பநத்தம் பகுதியில் செந்தில் என்பவர் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் வீரகனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கருப்பண்ணன் என்பவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது