சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் பொது நூலக இயக்ககம் சார்பில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலக கட்டடங்களையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.