சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினாவில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கொண்டாட்டத்திற்கு அனுமதி என்பதால் பெரும்பாலானவர்கள் பெசன்ட் நகர் நோக்கி படையெடுத்ததால் அப்பகுதியே மனித தலைகளாக நிரம்பி காணப்பட்டது. புத்தாண்டு பிறந்த பின்னர் நடத்தப்பட்ட டிரோன் கண்காட்சியையும் மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.