வெள்ளப்பெருக்கு காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க இரண்டாவது நளாக தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.