திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் பேரம் பேசிய 2 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களிடம் தலா 200 ரூபாய் கொடுத்தால் குறுக்கு வழியில் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி பேரம் பேசியதாக, மருதூரை சேர்ந்த தங்கப்பழம், வி.துறையூரை சேர்ந்த யாசிகா ஆகியோரை கைது செய்தனர்.