மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. அல்லிவளாகம், காத்திருப்பு, செம்பதனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட பத்து மாத வாழை மரங்கள் குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கனமழை மற்றும் காற்றில் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். ஏக்கருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.