தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக இரண்டு பகல் இரண்டு இரவுகளாக ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் சக்தி யாழி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். அதில் சுற்றுவட்டார பகுதிகளை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.