திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணியக்காரன்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் 27 ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கிராம தெய்வங்களை வழிபட்டனர். பின்னர் பக்தர்களின் பாதங்களில் பால் ஊற்றி பாத பூஜை செய்யப்பட்டதை தொடர்ந்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.