ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.