திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேகமாக வந்து வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ, எதிரே வந்த அரசு பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட விபத்தின் அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் ஆட்டோவில் பயணித்த கார்த்திக், முரளி ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.