விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் வழக்கறிஞர் இடி தாக்கி உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முத்துராமலிங்கபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி, நீதிமன்ற வாயிலில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு செல்போனை எடுத்து பேச முயன்ற போது இடி தாக்கி உயிரிழந்தார்.